Sunday, April 23, 2006

இட ஒதுக்கீடு ஆணையம் உத்தரவு

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு ஆணையம் உத்தரவு

புதுடில்லி : "மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடியும் வரை பரிசீலிக்கக் கூடாது' என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட மத்திய அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில், அந்த மாநில மக்களை திருப்திப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அறிவிப்பை செய்ததாக தேர்தல் ஆணையம் அமைச்சர் அர்ஜுன்சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவரும் பதில் அளித்தார்.இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஐந்து மாநில தேர்தல்கள் முடிவதற்கு முன்னதாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அதுபற்றி பரிசீலிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடில்லி : "மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடியும் வரை பரிசீலிக்கக் கூடாது' என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட மத்திய அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில், அந்த மாநில மக்களை திருப்திப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அறிவிப்பை செய்ததாக தேர்தல் ஆணையம் அமைச்சர் அர்ஜுன்சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவரும் பதில் அளித்தார்.இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஐந்து மாநில தேர்தல்கள் முடிவதற்கு முன்னதாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அதுபற்றி பரிசீலிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமலர்

No comments: