Monday, April 17, 2006

மதமாற்ற தடைச் சட்டம் வாபஸ்

மதமாற்ற தடைச் சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு விட்டது!!
மதமாற்றச் சட்டம் குறித்து தி.மு.க., மறைமுக பிரசாரம் * உளவுத்துறை அவசர தகவல்கம்பம் : மதமாற்ற தடைச்சட்டம் பற்றிய பிரசாரத்தை, சிறுபான்மை மக்களிடம் தி.மு.க., மறைமுகமாக நடத்தி வருகிறது. அதனை முறியடிக்கும் விதமாக முதல்வர் தனது பிரசாரத்தில் பேச வேண்டும் என அரசுக்கு, உளவுத்துறை அவசர தகவல் அனுப்பியுள்ளது. மதமாற்ற தடை சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்தார். அந்த சட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்த சட்டத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.ஆனால் தற்போது தி.மு.க., தனது தேர்தல் பிரசாரத்தில், தமிழக அரசின் மதமாற்ற தடைச் சட்டம் பற்றி பேசி வருகிறது. தங்கள் கட்சி பேச்சாளர்களுக்கு மேலிடம் வழங்கியுள்ள ஆலோசனையில், பொதுக்கூட்டங்களில் குறிப்பாக சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இதுபற்றி விரிவாக பேசவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள், அந்தந்த பகுதி சார்ந்த பிஷப்களை சந்தித்து, அவர்களிடம் மதமாற்ற தடைச்சட்டம் இன்னும் காலாவதி ஆகவில்லை என எடுத்துக் கூறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சிறுபான்மை மக்களிடம் மறைமுகமாக தி.மு.க., நடத்தும் இந்த பிரசாரம் குறித்து உளவுத்துறை, அவசர தகவல் ஒன்றை அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது. மதமாற்ற தடைச் சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு விட்டது என்றும், அதைப்பற்றி சிறுபான்மை மக்கள் கவலைப்பட தேவையில்லை என விளக்கம் அளிக்கும் வகையில் ஆளும் கட்சி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்றால், முதல்வர் தன்னுடைய பிரசாரத்தில் இந்த விஷயம் பற்றி பேசினால் தான், சிறுபான்மை மக்களை சென்றடையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.dinamalar.com/2006april17/general_tn7.asp
த.மு.மு.க வின் கலகம் ஒரு வழிக்கு நன்மையிலேயே முடிந்துள்ளது , இதே போன்று இடஒதுக்கீட்டிலும் நன்மை விளையும் என்று எதிர்பார்ப்போம். - முகவைத்தமிழன்.

No comments: