Sunday, April 16, 2006

சிதம்பரம்-தயாநிதி-அன்புமணி








லண்டன் நிறுவனத்தின் இயக்குநராக செயல்படும் மத்திய நிதியமைச்சர் திரு-.சிதம்பரம், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, ஜனதா கட்சித் தலைவர் திரு- .சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஊழல் புரிந்ததாக உலக வங்கியால் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சர் திரு .அன்புமணியை, டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். ஜனதா கட்சித் தலைவர் திரு.சுப்ரமணியன் சுவாமி, சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மத்திய கூட்டணி அரசில் அங்கம்வகிக்கும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய நிதியமைச்சர் திரு-.சிதம்பரம், லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் இயக்குநராக செயல்படுவதாகவும், அதன்மூலம் கிடைத்த சுமார் 15 லட்சம் ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல், மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் திரு.சுப்ரமணியன் சுவாமி புகார் கூறினார். குழந்தைகள் சுகாதார நலத் திட்டத்திற்காக இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதற்கு முன்வந்த உலக வங்கி, மத்திய சுகாதார அமைச்சர் திரு.அன்புமணியின் ஊழல் காரணமாக, அந்தக் கடனுதவியை ரத்து செய்துவிட்டதாகவும், இதுகுறித்து பிரதமருக்கு, உலக வங்கி கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை சீர்குலைத்த திரு.அன்புமணியை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றும் திரு.சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தினார். திரு. கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சியான சன் டி.வி. நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பது உலகமகா மோசடி என்று குற்றம்சாட்டிய திரு-.சுப்ரமணியன் சுவாமி, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்களை ஏமாற்ற முயலும் தி.மு.க.வின் கனவு பலிக்காது என்றும் திரு.சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

நன்றி: ஜெயா டிவி இணையத்தளம் 16 ஏப்ரல் 2006

No comments: