Thursday, April 27, 2006

ஆடாத ஆட்டமெல்லாம்

ஒரு கற்பனைச் சம்பவம்:
நடிகை ராதிகா, இயக்குநர் விசு ஆகியோரைத் தொடர்ந்து பெப்சி உமாவும் அ.இ.அ.தி.மு.கவில் சேருகிறார். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் அவரைக் காணவில்லை. சன் டிவியில் இருந்து விலகி ஜெயா டிவியில் சேர்ந்து விட்டதாக ஃபோனிலேயே தெரிவித்து விடுகிறார். சன் டிவி நிர்வாகம் பெப்சி உமாவின் இடத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை நியமிக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜயை இவர் ஒரு நிகழ்ச்சியில் பேட்டி எடுத்தது நினைவிருக்கலாம். நிகழ்ச்சி தொடங்குகிறது. அருளடியான் சன் டிவிக்கு தனக்கு பிடித்த பாடலைக் கேட்டு ஃபோன் செய்கிறார்.

அருளடியான்: ஹலோ! பெப்சி உமா இல்லையா?
தயாநிதி மாறன்: எங்க தாத்தா வெளியிட்ட பார் வியக்கும் தேர்தல் அறிக்கையைப் படித்தீர்களா? ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேளுங்கள்.
அருளடியான்: 'ஆடாதடா ஆடாதடா மனிதா! ரொம்ப ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா!' பாட்டைப் போடுங்க!
தயாநிதி மாறன்: அந்தப் பாட்டு ரொம்ப பழைய பாட்டு. வேற பாட்டைக் கேளுங்க!
அருளடியான்: 'ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்குத் தெரியுமா?'

அருளடியான் தொலைப் பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவரது தொலப்பேசி இணைப்பு சன் டிவியால் துண்டிக்கப் படுகிறது.

தயாநிதி மாறன்: இவர் பேசுவது தெளிவாக இல்லை. ஒரு வேளை இவர் பேசுவது டாடா டெலிகாமாக இருக்கலாம். எனவே நாம் அடுத்த காலரிடம் பேசுவோம்.

1 comment:

Anonymous said...

SEMA KALAKKALUNKO....HIEHIHI