Sunday, April 16, 2006

ஒரு ஃபாசிஸ்டின் தோற்றமும் வளர்ச்சியும்




ஒரு ஃபாசிஸ்டின் தோற்றமும் வளர்ச்சியும்

வைகோவின் தந்தை வையாபுரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். வைகோவும் தன் கல்லூரி காலம் வரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார். மொழிப்போராட்டத்தின் போது, அதனை கேலி செய்து பேசினார். தி.மு.க வளர்ச்சியடைந்த காலத்தில் வைகோ அக்கட்சியில் சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே கலைஞரால் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். 18 ஆண்டு காலம் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது இவரை விட அனுபவமும், தகுதியும் வாய்ந்த தலைவர்களைப் புறக்கணித்து, இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது. அப்போது இவர் முரசொலி மாறனுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார். அல்லது விசுவாசமாக நடந்து கொள்வது போல் நடித்தார். நியமன பதவியில் இருந்த இவர் தி.மு.க சார்பாக சிவகாசி தொகுதியில் நின்ற போதும், தனிக்கட்சி தொடங்கி அத்தொகுதியில் நின்ற போதும் தோற்றார். தன் சொந்த தொகுதியான விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியிலும் தோற்றார். இதில் இருந்தே இவர் மக்கள் செல்வாக்கில்லாதவர் என்பதை அறியலாம். முதன் முதலாக அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தபோதே இவர் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தி.மு.கவில் இருந்து விலகிய போது தன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறக்கவில்லை. பதவிக்காலம் முழுதும் அனுபவித்தார். (தி.மு.கவில் இருந்து விலகியுள்ள சரத் குமார் என்ற நடிகனும் தன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறக்கவில்லை. தகுதியான பலருக்கு கொடுக்காமல் ராதிகா புருஷன் என்பதால் சரத்துக்கு கொடுத்த கலைஞருக்கு இது தேவை தான். ) அப்போதே, வாஜ்பாய், அத்வானி போன்ற இந்து வெறி தலைவர்களுடன் நெருங்கிய உறவும், மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் வெறுப்பும் கொண்ட அரசியல் பேச்சுகளை மாநிலங்களவையில் பேசினார்.


அ.இ.அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முதன் முதல் அமைய தரகர் வேலை பார்த்தார். கலைஞர், பா.ஜ.கவுடன் கூட்டணி சேரும் முன்னர், அவர்களை பண்டாரம், பரதேசிகள் என்று சொல்லி விட்டாராம். அதனை இந்த பா.ஜ.க விசுவாசி இப்போது சொல்லிக் காட்டுகிறார். பா.ஜ.கவை பண்டாரம், பரதேசிகள் என்று சொன்னதில் என்ன தப்பிருக்கிறது? அப்படிச் சொல்வதால் இல.கணேசனுக்கு வராத கோபாம் இவருக்கு மட்டும் எப்படி வருகிறது? பா.ஜ.கவும், ம.தி.மு.கவும் கோவையில் கணிணிப் பூங்கா அமைக்கப் படும் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளன. இது தற்செயலாக அமைந்ததாய் தெரியவில்லை.

வைகோ ஒரு ஃபாசிஸ மனபாண்மை கொண்டவர். இவர் ஹிட்லரின் எழுத்துக்களை புகழ்ந்து பேசியுள்ளார். வைகோ, டாக்டர் ராமதாஸ் இருவரும் தேர்தலுக்குப் பின் பா.ஜ.கவுடன் இணைந்து கூட்டணி அமைப்பார்கள். எனவே இவர்களை தமிழ் நாட்டு முஸ்லிம் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய இரு அமைப்புகளும் இது தொடர்பாக ஒருமித்து செயல்பட வேண்டும்.

1 comment:

அருளடியான் said...

நடிகர் சரத்குமார் தன் மனைவி நடிகை ராதிகாவுடன் அ.இ.அ.தி.மு.கவில் இணைந்துள்ளார். தன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.