Wednesday, March 16, 2005

தொழுகை (பகுதி 5)

வெளிநாட்டிற்கு செல்கையில் ஒரு பழம் ஒன்றை சாப்பிடுகிறோம். மிகவும் சுவையாக உள்ளது. அதை பற்றி நாம் அந்த பழத்தை பற்றி கேள்வியும் பட்டிராத ஒருவரிடம் சொல்லும் போது அதன் சுவையை முழுமையாக எடுத்து கூறி விட முடியாது.

அப்படி எடுத்து கூறும் போது எதிராளிக்கு தெரிந்த ஒரு பழத்தை பற்றி இந்த பழம் போல் இருந்தது அந்த பழம் போல் இருந்தது என்று தான் சொல்ல இயலுமே தவிர அதன் தனித்தன்மை பெற்ற சுவையை முழுமையாக விளக்கி விட முடியாது.

இந்த உதாரணத்தை பெருமானார் வாழ்வில் நடந்த பல சம்பவங்களுக்கு மேற்கோள் காட்ட முடியும். அவர்கள் மிஹ்ராஜ் சென்றது, அவர்களுக்கு வஹி வந்தது, இப்படி பல சம்பவங்கள்.

அனுபவித்து அடைந்த பேரின்பத்தை விளக்க வார்த்தைகள் கிடையாது. மொழியின் குறைகளினால் தான் அல்லாஹ்வை கூட அவன் இவன் என்று வழங்கி வருகிறோம்.

பெருமானார் சொன்னார்கள் 'இறைவணக்கம் என்பது எனக்கு கிடைத்த உலக இன்பங்களில் ஒன்று..' என்று.

அவர்கள் அடைந்த பேரின்பம் வார்த்தைகளில் இல்லை.. அது இறைவணக்கத்தில் தான் உள்ளது..

(தொடரும்)

No comments: