Wednesday, March 30, 2005

மறுமொழிகள் வாழ்க/ஓழிக

வலைப்பதிவின் சிறப்பம்சத்தில் ஒன்று, மறுமொழி இடும் வசதியாகும்.

மறுமொழிகளால், கட்டுரையாளர் சொல்ல மறந்த எத்தனையோ விஷயத்தை சுட்டிக்காட்டி கட்டுரைக்கு வலிமை சேர்க்கமுடியும்.

இதன் மூலம்
1) கட்டுரையாளரை ஆர்வமூட்டுவது (அதற்காக மறுமொழிகள் செயற்கையாக இருக்கக்கூடாது)
2) கட்டுரை எழுத தயக்கயமாக இருந்தால், சிறு சிறு மறுமொழிகளின் மூலம் நமது எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ளலாம். (அதற்காக கட்டுரைக்கு சம்பந்தமில்லாததை கிறுக்க கூடாது)
3) கட்டுரையாளர் விட்டதை தொடுவது. (இதற்கு பல வழிகளை கையாளலாம்)

உதாரணமாக கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி, படித்துப் பாருங்கள்.

எழுதப் பழகுங்கள்!
டாக்டர்னா பெரிய பருப்பா நீ?
ஒட்டகப் பயணம் - 1

இதே மறுமொழி வசதியை வைத்து நல்ல கட்டுரையை அசிங்கப்படுத்திச் செல்பவர்களும் உண்டு.

இதற்கு உதாரணம் தேவையில்லைதானே?

No comments: