Tuesday, March 08, 2005

மத்திய பட்ஜட் தாயாரிப்பு ரகசியம்

மத்திய பட்ஜட் தாயாரிப்பு பணி, புதுடில்லியில் உள்ள நிதியமைச்சகத்தில் உள்ள "குவாரண்டைன்" என்ற வெளியுலக தொடற்பே இல்லாத கட்டுப்பாடு மிக்க ஒரு பகுதியில் தான் நடைபெறும். இதில் 40 பேர் பணியில் இருப்பர். இந்த 40 பேறும் உண்பது, வேலை செய்வது, உறங்குவது இல்லத்தில் நடக்கும் அனைத்து பழக்க வழக்க கடன்களும் குவாரண்டைனுக்குள் தான். அதிகபட்சமாக 45 நாட்கள் வரை பட்ஜட் தயாரிக்கும் பணி நடக்கும். இந்த குவாரண்டைனைச் சுற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 28 இன்ஸ்பெக்டர்கள், மப்டி உடையில் இருக்கும் 15 இண்டெலிஜென்ஸ் அதிகாரிகள் பட்ஜட் ரகசிய கசிவுகளை தடுக்கும் பணியில் தீவிரம் காட்டுவர். இந்த பணி தொடங்கியதும் இப்பகுதிக்கு விசிட்டர்களோ, செய்தியாளர்களோ, இதர அதிகாரிகளோ வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டு விடும், இந்த குவாரண்டைன் உள்ளே மொபைல் போனா, லேண்ட் போனோ உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் மட்டுமே 40 பேருடனும் நேரடி தொடர்பு கொள்ள முடியும். இந்த குவாரண்டைனை குளு குளு வசதி செய்யப்பட்ட "பாதாள அரங்கு" என்றும் அழைப்பர். குவாரண்டைன் வாசிகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் இருந்து தேவையான அளவுக்கு உணவு வந்து சேரும். ஆனால் வைத்து சாப்பிட தட்டுக்கள் தரப்பட மாட்டாது, ஏனெனில் தட்டின் பின்புறம் சில வசனங்களை எழுதி அந்த தட்டை வெளியில் அனுப்பி விட வாய்ப்பு இருக்கிறது. எல்லாமே காகிதத்தில் ஆனவைதான், இதை கூட சாப்பிட்ட பின் அங்கேயே அழித்து விடக்கூடிய இயந்திரங்கள் உண்டு. ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குறிய அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த பாதாள அரங்கிள் அதிகாரிகள் உழைக்கவும் செய்யலாம் ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் விடியலில் தொடங்கும் பணி, நள்ளிரவு வரை நீடிக்கும். இவ்வாறு 50 ஆண்டு காலமாக இந்த பட்ஜட் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது.
(நன்றி : தினமலர்-வார மாலர்)

1 comment:

Abu Umar said...

அபூயாசிர்,
கட்டுரையை Justify செய்யாதீர்கள். சில Browser-களில் படிக்க இயலாது.

முடிந்தால் பாரா பிரித்து எழுதவும்.

அன்புடன்
அபூ உமர்