Thursday, March 10, 2005

நீ எங்கே!...எங்கே!

காணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு:

ஒரு பக்கத்தை உடைய "யூசுஃப் இஸ்லாம்" அவர்களுக்கு பத்திரிகைகள் நஷ்ட ஈடு கொடுத்த செய்தியை தாங்கிய எனது பதிவு காணாமல் போய்விட்டது. காணாமல் போகும்போது கறுப்பு மற்றும் நீல கலரில் எழுதப்பட்டிருந்தது. கண்டுபிடித்தால் ஏன் காணாமல் போனது என்று தெரிந்துக்கொண்டு அதனை மட்டும் தெரிவிக்கவும்.
-சலாஹுத்தீன்-

மேலே நான் குறிப்பிட்டிருந்தது. கதை கலந்த நிஜம். சற்று முன் சலாஹுத்தீன் அவர்கள் "யூசுஃப் இஸ்லாம் அவர்களுக்கு பத்திரிகைகள் நஷ்ட ஈடு தொகை கொடுத்தது பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தார். தற்செயலாக அவர் பதிந்த அதே நேரத்தில் நான் இணைப்பில் இருந்ததால் தெரிந்தது. சிறிது நேரத்தில் அது காணாமல் போய்விட்டது.

காணாமல் போகும் என்று தெரிந்ததால் தொடுப்பினை மட்டும் எடுத்துவைத்துக்கொண்டேன். எழுதுவதற்கு எனக்கும் ஒரு விஷயம் வேண்டுமல்லவா.

அவரின் கட்டுரை கீழே:
-------------------------------------------------------------
யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்!(மார்ச் 8-ல் http://islamanswers.blogspot.com/ -ல் பதியப்பட்ட இத்தகவல் காணாமல் போய்விட்டது. அதையே இங்கு மறுபதிவு செய்கிறேன்.)

இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இவ்வளவு என்று குறிப்பிடாமல் தாங்கள் யூசுஃப் இஸ்லாம் எனும் பிரபல பாடகருக்கு இழப்பீடு கொடுத்ததாக தெரிவித்தன. முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகராக இருந்தவர் யூசுஃப் இஸ்லாம். அவர் இஸ்லாத்தை தழுவியபின் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டு உலகெங்கும் சுற்றி வருகிறார். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் உருவாக்கி அறப்பணிகள் செய்து வருகிறார். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இவரை பயங்கரவாதத்துடன் தொடர்புப் படுத்தி செய்தி வெளியிட்டதற்காக இந்த இழப்பீட்டை அவருக்கு அளிக்க வேண்டிய நிலை அப்பத்திரிக்கைகளுக்கு ஏற்பட்டது.

இது பற்றி யூசுஃப் இஸ்லாம் கூறியதாவது: "தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கையும், தி ஸன் பத்திரிக்கையும் என்னைப் பற்றி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி இனி எழுதுவதில்லை என்றும் இதற்கான சட்ட நடவடிக்கைக்குரிய எனது செலவு தொகையோடு எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தருவதாகவும் ஒப்புக் கொண்டுவிட்டன. இப்பொதெல்லாம் முஸ்லிம்களைப் பற்றி பொய்யாகவும் அவதூறாகவும் செய்திகளை வெளியிடுவது மீடியாவுக்கு மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்விஷயம் எனக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணிவிட்டதோடு, நான் செய்து வரும் அழைப்புப்பணி, கல்விப்பணிகளுக்கு இடையூறு உண்டாக்கிவிட்டது. இவ்விதம் இழைக்கப்பட்ட தீய விளைவை நேர் செய்வது பெரும்பாலும் சிரமமானதொன்றாகும்" என்று கூறினார் யூசுஃப் இஸ்லாம்.

நன்றி: நம்பிக்கை மாத இதழ் மார்ச் 05
-----------------------------------------------------------------

சப்ஜெக்ட் பெரிதாக இருந்தால் இதுதான் நிலைமை. இதனைப்பற்றி ஏற்கனவே தமிழ்மணத்தில் பேச்சு அடிப்பட்டிருக்கிறது.

பிரச்சினை தீர்க்க வழிகள்:
1) தமிழ்மணத்தில் பதிவு செய்த வலைப்பதிவுகளில் பதிந்த கட்டுரைகள் காணாமல் போய்விட்டால் அதனுடைய தொடுப்பினை தேதிவாரியாக கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிற பகுதிக்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு மீண்டும் பதிவு செய்யுங்கள். பதிவு செய்யும்போது சப்ஜெக்ட் முன்பு போல் பெரிதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். காணாமல் போன விஷயத்தை குறிப்பிட்டு அதனுடைய தொடுப்பினை கொடுத்தால் வாசகர்கள் சடைவடைய மாட்டார்கள்.

2) தமிழ்முஸ்லிமில் காணாமல் போனால் நிர்வாகியை திட்டாமல் மீண்டும் பதிந்துவிடுங்கள்.

அன்புடன்
அபூ உமர்

(இஸ்லாம் ஆன்சர்ஸ் வலைப்பதிவில் மறுபதிவு செய்யுமாறு இதன்மூலம் சலாஹுத்தீனை கேட்டுக்கொள்கிறேன்).

காணாமல் போன இஸ்லாம்ஆன்சர்ஸ் பதிவின் தொடுப்பு கீழே:
யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்!

2 comments:

Salahuddin said...

நன்றி அபூ உமர் அவர்களே, சப்ஜெக்ட் இத்தனை எழுத்துக்களுக்கு மேல் போனால் இவ்வாறு ஆகும் என்று ஏதாவது வரம்பு உள்ளதா?

Abu Umar said...

அதுபற்றிய ஆராய்ச்சி எதுவும் செய்ததில்லை. அந்த அளவுக்கு எனது மேல்மாடியில் விஷயமும் இல்லை.